Tuesday, April 24, 2007

வீடு கிடைச்சுதா?

எப்படியோ ரூம் மேட்டுகிட்ட ஒரு வாரம் டைம் வாங்கியாச்சு. அதுக்குள்ள வீடு கிடைக்கணுமே! மெட்ராசு ஊரில பேச்சிலர் பசங்களுக்கு வீடு கிடைக்கிறதுன்னா, குதிரை கொம்புதானுங்க.

வீடு வச்சிருக்கிற ஓனரு பசங்க பேச்சிலரா இன்னொரு ஊரில வூடு கிடைக்காம திண்டாடினா புரிஞ்சிப்பாங்களா?ன்னு எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.

நாலு நாளு புரோக்கருக்கு போன் போட்டு பேசின செலவுதானே தவிர, வீடு ஒன்னும் கிடைக்கிற மாதிரி தெரியல.

ரூம் மேட்டு, ஆபிசு வேலையா பெங்களூருக்குப் போனவரு, அங்கிருந்து 'என்னலே, வூடு கிடைச்சுதா?' ன்னு கேட்டாரு. 'ம்ம்ம்னு இழுத்தேன்.

'இன்னும் மூணு நாளுதாம்ல இருக்கு. அதுக்குள்ள கிடைக்கலேன்னா, லாட்ஜுக்கு அடுத்த மாச வாடகை அட்வான்சா குடுக்கோணும், பாத்துக்கோ'ன்னுட்டு போன வச்சுட்டாரு.

அவரு வச்ச உடனே, புரோக்கரப் போனப் போட்டு புடிச்சேன். 'என்ன புரோக்கரு நீ..ஒரு வீடு பாத்து தரமுடியல. நூறூ ருபா டோக்கன் அட்வான்ச் மட்டும் வாங்கிக் கிட்ட'ன்னு தாறுமாறா கேக்க ஆரம்பிச்சேன்.

'அண்ணே கோச்சுகிடாதீக, நாளைக்கு 11.00 மணிக்கு, வெஸ்ட் மாம்பழத்துல ஒரு வீட்ட முடிச்சிரலாம், எல்லாம் பேசிட்டேன் நான்', அப்படின்னான்.

'மவன..நாளைக்கும் எதாவது கத சொன்ன, உனக்கு இருக்குடி' அப்படின்னு முனகிட்டே போன வச்சேன்.

'என்னா பாஸ்..முணுமுணுக்கிறீங்க' - அப்படின்னு கேட்டுகிட்டே தோளைத் தட்டினாரு, எதிர்த்த ரூம் நண்பர் அசோக்.

'இல்ல சார், வீடு பாத்து போகலாம்னு, நானும், ரூம்மேட்டும் முடிவு பண்ணினோம், ஆனா ஒன்னும் தகைய மாட்டேங்குது, அதான் புரோக்கர் பயகிட்ட திட்டினேன்'

'ஓ..அப்படியா..உங்க ரூம்மேட்டு போனவாரம் எங்கிட்ட கூட கேட்டாருன்னுட்டு, என்னோட கலிக்-கிட்ட சொன்னேன். அவரோட மாமாவோட ஒரு வீடு இருக்கிறதா சொன்னாரு. எதுக்கும் நீங்க எனக்கு நாளைக்குக் காலையில போன் பண்ணுங்க. நான் கேட்டுச்சொல்றேன்' னார்.

'சூப்பருங்க, கண்டிப்பா பண்றேன்'-னு சொல்லிகிட்டே சக லாட்ஜ் நண்பர்களைப் பார்க்கப் போனோம்.

'நாளைக்கு' என்ன நடந்ததுங்கிறத, நாளைக்குச் சொல்லட்டுமாங்கோ?

0 comments: