Sunday, July 8, 2007

எட்டிய எட்டு - நானானிக்கு நன்னி!!!

சாப்பிட்டுட்டு சாப்பிட்டுட்டு தூங்கிக்கினு இர்ந்தவனப் புடிச்சு இழ்த்து எட்டுப் போடச் சொல்லிக்கினாங்கபா, நம்ம நானானியம்மா?

ஏதோ கொஞ்ச நாள் கம்பெனி செலவுல அமெரிக்கா போய்ட்டுவாப்பா அனுப்பி வைச்சாங்கோ. அப்ப அங்கோ பொழுது போகாமா இருக்கறச்ச, நம்ம ரூம்மேட்டு சொல்லி தமிழ்மணத்துல எட்டிப் பாத்தேனுங்கோ.. கொஞ்சம் இண்ட்ரஸ்டா இருக்கச்சொல்லோ, நாமளும் எதுனா எழுதனும்னு தோணிச்சு.

மனசுல இருக்கிற ஆசய, ரூம்மேட்டுக்கிட்ட உளறுனப்போ, நீ என்னடா எழுதுவே.. நல்லா சாப்பிடத்தாண்டா தெரியும், அதப் பத்தி கூட எழுதலாம்'னு ஐடியா கொடுத்தான். அந்த ஜோருல தொடங்குனது. ம்ம்..ஆனா சாப்பிடறுதுல இருக்குற சுறுசுறுப்பு, எழுத்துல வர்ர மாட்டேங்குதேபா?

அதான் ஆரம்பிச்ச வேகம், அப்புறம் இல்லாம சும்மா கிடக்குது. ரொம்ப நாளாச்சே, ஏதாவது எழுதலாம்னு உள்ள வந்தா, நானானியம்மா எட்டு போடக் கூப்பிட்டுருக்காங்க்கோ..லைசென்ஸே நாம எட்டுப் போடாம வாங்கினது, இங்க வந்து எட்டுப் போடச்சொல்றாங்களே..ம்ம்..

இன்னொருவிதமா யோசிச்சா, அட, இப்படி கூட எழுத ஐடியா குடுக்குறாய்ங்களே, நம்மளயும் மனுசனா மதிச்சு கூப்பிட்டதுக்கு ஒரு நாலு வார்த்தயாவது எழுத வேணாம்.. பெரியவங்கோ நிறையப் பேரு என்னன்னவோ எழுதியிருக்காங்கோ, அதுமாதிரி..பெரிய விசயமெல்லாம் நம்ம கிட்ட ஏதுமில்லைங்கோ, நமக்குத் தோணினத ஏதோ எழுதியிருக்கேன், பெரிய மனசு பண்ணி படியுங்க.


  1. செல்லப்பிள்ளை சரவணன் : அட..நாந்தானுங்க அது. அண்ணன், அக்கா எல்லாருக்கும் ரொம்பப் புடிச்ச குட்டிப்பையர். அப்போ, குண்டு சட்டி கணக்கா 'பொதுக்..பொதுக்'னு இருந்ததால எல்லோருக்கும் ரொம்பப் புடிக்குமாம். ம்..ம்.. அப்பவே சாப்பிட ஆரம்பிச்சது..இன்னைக்கும் ஒரு புடி புடிச்சுகிட்டு இருக்கிறதால, தொப்பையப்பனுக்குப் போட்டியா தொப்பை வளந்துகிட்டு இருக்கு.



  2. அன்பு நண்பன் : ரெண்டாங்கிளாஸ் படிக்கிறப்போ ரெண்டு பிரண்ட்ஸ் ரொம்ப நெருக்கமானவங்க. பாபுன்னு ஒரு குண்டுப் பையன், சரியான மிரட்டல் பேர்வழி. தினமும் காலைல வந்த உடனே, என்னோட குச்சி பாக்ஸ அவங்கிட்ட காட்டணும். நீளமா, புதுக்குச்சு வாங்கியிருந்தன்னா, அத எடுத்து சுக்குச்சுக்கா ஒடைச்சு கையில கொடுப்பான். அழுகையா வரும், ஆனாலும், தினமும் அவங்கிட்ட பாக்ஸ காட்டனும், இல்லன்னா, கிள்ளி வுடுவான். வலிக்கும், அழவும் முடியாது, டீச்சர்கிட்ட சொல்லுவேன்னா, வெளில வந்து அடிப்பேம்பான். முதப் பரீட்சை முடிஞ்சு, ரேங்க் வரிசைப்படி உக்கார வச்சுட்டாங்க. அதுலதான், அவங்கிட்ட இருந்து தப்பிச்சேன். அப்ப, பக்கத்துல வந்தது வெங்கடேஷ்னு ஒரு ஒல்லிப்பிச்சான். நல்ல கலரா இருப்பான், கண்ணாடி போட்டிருப்பான்.ஏப்பவும் சிரிச்சமாத்ரியே இருப்பான். பயங்கர தோஸ்த்தாயிட்டான். அப்படியே பாபுவுக்கு எதிர். அவன்கிட்ட பாபு பத்திச் சொன்னேன். அவங்க அப்பா, போலீஸ்காரர். பாபுவ கூப்பிட்டு , 'சேட்டை எதுனா பண்ணினா, எங்கப்பா போலிஸு, அவர்கிட்ட சொல்லிடுவேன்'ன்னு மிரட்டினான் பாருங்க, அதுக்கப்புறம் பயங்கர மரியாதையாயிட்டான். ஆனா, ஒல்லியா இருந்ததினாலோ என்னவோ வெங்கடேஷுக்கு அடிக்கடி உடம்புக்குச் சரியில்லாம போகும். அப்பப்போ வருவான், அப்புறம் வருவதும் நின்று போனது. அப்புறம் டீச்சர்தான் ஒரு நாள் சொன்னாங்க, அவன் ஏதோ எலும்புருக்கி நோயால இறந்துட்டான்னு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. முதலில் என்னை நேசித்த என் இனிய நண்பன், இப்பவும் அவன் முகம் கண்ணுக்குள் நிற்கிறது.



  3. காசேதான் கடவுளடா: என்னோட சின்ன வயசுல எல்லாம், எங்க குடும்பம் வசதியான குடும்பம் கிடையாது. ஆம்பிளைப் பிள்ளைங்களை படிக்க வைக்கணும்னுட்டு, அக்காவெல்லாம், ஆறாவதுக்கு மேல படிக்க வைக்க முடியலை. அக்காவோ, அம்மாவோ என்னை ஸ்கூல்லுக்கு விடுறப்போ, அட்வைஸ் பண்ணுவாங்க. கண்ணுல பாக்கிறத எல்லாம் வேணும்னு கேக்கக் கூடாது, அப்பா கஷ்டப்படுறாங்க. நாம ரொம்ப தொந்திரவு கொடுக்கக் கூடாது..அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணுவாங்க. ஓரளவுக்குக் கேட்டிருக்கேன்னுதான் நினைக்கிறேன். அப்பாவும் அடிக்கடி சொல்லுவாங்க, 'பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியலடா, உங்களப் படிக்க வைக்கிறது பின்னாடி அவங்களுக்கு நீங்க உதவணும்டா'ன்னு. அப்பாவின் விருப்பமும், வளர வளர காசோட அருமையும், அது கட்டிப் போட்ட தருணங்களும் காசு சம்பாதிச்சு, இவங்கள எல்லாம் நல்லா வச்சுக்கணும் எண்ணச் சொல்லிச்சு. இப்ப ஓரளவுக்கு அதை நோக்கிப் போய்கிட்டு இருக்கேன்னுதான் சொல்லணும்.



  4. கண்ணடிச்சா தப்பா? : ப்ளஸ் ஒன் படிக்கையிலன்னு நினைக்கிறேன். கூடப் படிக்கிற பசங்கள்ளாம், சைட்...சைட்..னு பேசிப்பாங்க. நமக்கு என்னவோ அது கெட்ட வார்த்தைன்னு படும். அப்படி ஒரு நாள் பேசிக்கிறப்பதான், 'மாப்பிள்ளை பெஞ்ச்' பையன் ஒருத்தன் என்னப் புடிச்சு கலாய்ச்சுகிட்டு இருந்தான். 'நீ சைட் அடிப்பியாடா?'ன்னான். 'ஆ..அடிப்பேனே'ன்னேன். ஆச்சரியமா என்னப் பார்த்துட்டு, 'சைட்-டுனா என்னனு தெரியுமாட உனக்கு?'ன்னான். 'ஆ..பொண்ண்ங்களைப் பார்க்கிறதுதானே'ன்னேன். 'அதானே, பார்த்தேன். மடையா, பாக்குறதுக்குப் பேரு லுக்கு வுடுறது. 'சைட்' அடிக்கிறதுனா, லுக்குவுடுற பொண்ணு உன்னப் பாக்கிறச்ச, நீ கண்ணை இமைக்கனும், அதுக்குப் பேருதான் சைட் அடிக்கிறது. பண்ணியிருக்கியான்னான். 'அய்யோ' - அப்படின்னேன். இவன்கிட்ட இப்படி பேசி ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் இருக்கும். பக்கத்து ஊருக்குப் போறதுக்காக, அப்பா கூட பஸ் ஸ்டாண்ட் நோக்கிப் போய்கிட்டு இருந்தேன். வழக்கமா, ஸ்கூலுக்குப் போறப்போ வர்ர பொண்ணு எதிர்த்தாப் போல வந்துகிட்டு இருந்தா. வழக்கமா ஸ்கூலுக்குப் போறப்போ, லுக்-கு விட்டுருக்கேன். வழக்கமா ஸ்கூல் யூனிபார்மில வர்ர பொண்ணு, இன்னைக்கு கலர் டிரஸ்ல. அப்ப பாத்துதான் நம்ம ஃபிரண்டோட சைட் விளக்கம் நினைவுக்கு வந்துச்சு. அப்பாவ மெல்ல முன்ன போகவிட்டுட்டு, பின்னாடி நடந்தேன். 'ம்..ம்.. எப்படியும் என்னைப் பார்ப்பா, அப்போ கண்ணடிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன். கை,காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. ஆனாலும், அடிச்சுடணும்னு முடிவு பண்ணினேன். சரியா, அப்பாவ க்ராஸ் பண்ணினதும், என்ன பார்த்தா. எங்கயிருந்து எனக்கு தைரியம் வந்ததோ தெரியாது, அவள் பார்த்த சமயம், டபக்-குன்னு என்னோட இடக்கண்ணை அடிச்சேன். ஒரு செகண்ட் அந்தப் பொண்ணு நின்ன மாதிரி தோணுச்சு, ஆச்சரியமா இல்லை மிரட்சியா என்ன எக்ஸ்பிரஸன்னு தெரியல, கண்ணை நல்ல அகலமா விரிச்சுப் பார்த்தா. அவ்வளவுதான், எனக்குள்ள இருந்த தைரியம் எங்க போச்சுன்னு தெரியலை. வேகமாப் போய் அப்பாவோட ஜாயின் பண்ணிகிட்டேன். அப்புறம் பஸ்ல போறப்ப எல்லாம், ஒரே பயம். அந்தப் பொண்ணு இருப்பதும் எங்க தெருதான், எங்க வீடும் தெரியும், எங்கயாவது வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவாளோன்னு பயம் வேற. வூட்டுக்கு வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிரக் கூடாது, அப்புறம் குடும்பத்துக்கே கெட்ட பெயராயிடும்..அண்ணன் அக்கா கண்ணில எல்லாம் எப்படி முழிப்பது..போகிற வழியில இருக்கிற சாமியெல்லாம் கும்பிட்டு, மன்னிப்பு கேட்டேன். நிசமாங்க, அதுதான் நா அடிச்ச முதலும்,கடைசியுமான சைட்டு. இப்ப நினைச்சாலும், நானா அப்படியிருந்தேன்னு இருக்கு. இப்ப சைட் அடிக்கிறதில்லையான்னு கேக்காதீங்க, ஜஸ்ட் லுக்குதான் வுடுறேன். :)



  5. ஊத்தப்பம்: என்னமோ எனக்குப் பிடிச்ச உணவு அயிட்டம்னு நினைச்சுக்காதீங்கோ! காலேஜ்-ல பசங்க வச்ச பட்டப் பெயரு. உருட்டுக்கட்டை மாதிரி இருந்ததால அந்தப் பேரு.

இன்னும் மூணு இருக்கா? இதுவே பெரிசா எழுதிட்டமாதிரி இருக்கு. அப்புறம் மிச்சத்தையும் எழுதுறேன்.